பல தன்பாலின தம்பதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த நிலையில் இந்திய தடகள வீராங்கனையான டூட்டி சந்த் (Dutee Chand) உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் என் பார்ட்னர் மோனாலிசாவை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருந்தேன். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என் அனைத்து திட்டங்களையும் சீர்குலைத்துள்ளது.
நான் ஐந்து வருடங்களாக மோனாலிசாவுடன் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம், பெரியவர்களாகிய நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com