பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த கொள்கைகள்தான் நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அதே நேரம் சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய இந்தியாவின் தார்மீக தைரியத்தையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.


மனித குலத்தின் மனிதாபிமான சட்டம் தூள் தூளாக்கப்பட்டு, உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவற்றை பல லட்சக்கணக்கான மக்களுக்குச் சென்று சேர்வதை தடுக்கப்படுகிறது. எனவே, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை எதிர்ப்பது இந்தியாவின் இந்தக் கொள்கைதான். ஆனால், இந்தியாவின் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பது என்பது, நமது நாடு ஒரு தேசமாக அதன் வழிவழியாக நின்ற அனைத்து நிலைப்பாட்டுக்கும் எதிரானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com