அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தச் சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ரஷ்ய விமானி ஒருவர், “விமானத்திலிருந்து பயணிகள் யாரும் இறங்க வேண்டாம். விமானத்தின் கதவுகளைத் திறக்க வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். சில விமானங்கள் வேறு மாகாணங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் ஓடுதளத்திலிருந்த இஸ்ரேல் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. மேலும், நவம்பர் 6-ம் தேதி வரை இந்த விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள், ரஷ்யாவில் இருக்கும் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக உறுதியுடன் செயல்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
