வலிக்காமல் சாவது எப்படி….? கூகுள் உதவியை நாடிய  இளைஞரை, காப்பாற்ற இன்டர்போல் எடுத்த நடவடிக்கை…..!

திருமணமாகி, மூன்றே மாதத்தில், தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி….! கதறும் கணவர்….!

பொதுவாக, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடையே, பிரச்சனைகளை சந்திப்பதற்கான மன துணிவே இருப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் பெற்றோர்களின் அரவணைப்பிலேயே இருப்பதன் காரணமாக, அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை சட்டென மேற்கொண்டு விடுகிறார்கள்.

ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது நிச்சயமாக ஒரு தீர்வாக இருக்காது. அதை இன்றைய காலகட்ட இளைஞர்கள் நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பது அவசியமாகும். அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஒரு இளைஞர் மிகுந்த மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று இணையதளத்தின் மூலமாக பலமுறை தேடி இருக்கிறார்.

அவருடைய இந்த செயலை சர்வதேச குற்றவியல் காவல்துறை அமைப்பான இன்டர்போல் கண்காணித்து வந்துள்ளது. அந்த இளைஞரை தொடர்ந்து கண்காணித்து வந்த அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், அந்த இளைஞர் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பதை மட்டும் யூகித்துவிட்டனர். இதன் பின்னர் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அந்த அமைப்பு முடிவு செய்தது. அதன்படி செயல்படவும் தொடங்கியது.

அதாவது அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இளைஞரின் தொலைபேசி எண்ணோடு, மும்பை காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் ஒரு மின்னஞ்சலை அனுப்பினர். இதைப் பார்த்து அதிர்ந்து போன மும்பை காவல்துறையினர், அந்த இளைஞரை மீட்பதற்கு விரைந்து செயல்பட தொடங்கினர். அதன்படி அவருடைய செல்போன் எண்ணை வைத்து, அவருடைய இருப்பிடத்தையும் மும்பை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன்படி, அந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருபவர் 28 வயதில் வயது இளைஞர் என்றும், அவர்  ஒரு ஆறு மாத காலமாக வேலையில்லாமல் வெட்டியாக இருந்து வந்ததும் தெரிய வந்தள்ளது. அதோடு ஒரு குற்றவியல் வழக்கில் அவருடைய தாயார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறைக்கு சென்ற நிலையில், அவரை வெளியே கொண்டு வர முடியாததால், அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதும் காவல்துறை  விசாரணையின் மூலமாக தெரிய வந்தது. ஆகவே, வேலையின்மை மற்றும் தன்னுடைய தாயை சிறையில் இருந்து மீட்க முடியாத காரணத்தால், மன உளைச்சலில் இருந்த அந்த வாலிபர், இப்படி ஒரு விபரீத முடிவை மேற்கொள்ள காத்திருந்தார் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் பிறகு அந்த வாலிபர் எந்த வித விபரீத முடிவும் மேற்கொள்வதற்கு முன்னால், அவரை காவல்துறையினர் பத்திரமாக காப்பாற்றினர், பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன உளைச்சல் அதிகமாகி அதன் காரணமாக, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வது எப்படி? என்று இணையதளத்தின் மூலமாக தேடுதல் வேட்டை நடத்தினார் என்பது காவல்துறையினருக்கு தெரியந்துள்ளது. அதன் பிறகு அவரை காப்பாற்றிய காவல்துறையினர், அவருக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *