Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
ஒருவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அவர் நிறைய சம்பாதிக்கிறார், ஆனால் அவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?
இப்போதெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் காலம். மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்மூடித்தனமாக செய்கிறார்கள். இருப்பினும், பணத்தை மட்டுமே பயன்படுத்த விரும்பும் பலர் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வருமான வரிச் சட்டம், வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு எந்த வரம்பும் விதிக்கவில்லை. வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது.
அனைத்து பணமும் உங்கள் முறையான வருமானத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் வருமான வரித்துறையினரோ அல்லது மற்ற அதிகாரிகளோ சோதனை நடத்தி அதிகப் பணத்தைப் பிடித்தால், அந்தப் பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது..? யாரிடம் இருந்து வந்தது..? போன்ற முக்கியமான ஆதாரத்தை நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். இல்லையெனில் பெரும் பிரச்னை வரும்.
உங்கள் கையில் இருக்கும் பணத்திற்குச் சரியான முறையில் உரிய கணக்கு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லாத நிலையில் வருமான வரி துறையின் விசாரணை, வழக்கு எனப் பலவும் இதில் அடங்கும். எனவே எப்போதும் கையில் இருக்கும் பணத்திற்கு வருமான வரிக் கணக்கை நீங்கள் பூர்த்திச் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
மத்திய நேரடி வரி அமைப்பின் விதிமுறைகள் படி பணத்திற்கான ஆதாரத்தைக் காட்ட முடியாவிட்டால், வரித் துறை பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்குச் சுமார் 137 சதவீதத்திற்கு இணையான அபராதத்தை விதிக்க முடியும். மேலும் வருமான வரி விதியின்படி, உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெறக்கூடாது. அவ்வாறு செய்தால், வங்கி வாயிலாகப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். இதேபோல் ரொக்கமாக ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்ய முடியாது.
2 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை வாங்கினால், உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையைக் கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் கிரெடிட் – டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துபவர் வருமான வரித்துறை கண்காணிப்புக்குக் கீழ் வரலாம். இந்தியாவில் எந்த வங்கியாக இருந்தாலும் 2 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணத்தை வித்டிரா செய்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
The post வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்..? சட்டம் சொல்வது என்ன..? முழு விவரம்… appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com