ஆளுநர் கையால் பட்டம் வாங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என நடிகர் ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியும் முனைவர் பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இசை தொடர்பாக 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தாகவும், இப்போது அது நிறைவுற்று இருப்பதாகவும் கூறினார்.
மேலும், வேறு வேலை பார்த்துக் கொண்டே படிப்பது கடினமாக இருந்தது. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய படம் வரும் என்று தெரிவித்தார். முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவரிடம், ஆளுநரிடம் இருந்து பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும். அதற்கு வேறு மாற்று இல்லை என்று கூறீனார். மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்திருக்கிறேன்” என்றார்.
நன்றி
Publisher: 1newsnation.com