இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக அவதூறுகளைப் பரப்புகிறார்கள். நான் எந்தப் பதவியையும் விரும்பவில்லை”எனப் பேசி முடித்ததாகதகவல் வெளியாகி உள்ளது.

மேடையிலேயே நிதிஷ்குமாரின் இந்தச் செயல் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பின்னர் அவரை சில தலைவர்கள் சமாதானம் செய்திருக்கிறார்கள். சில எதிர்க்கட்சித் தலைவர்கள், நிதிஷ்குமார் ஏதோ கோபமாக இருப்பதாகவும், கூட்டத்தில் அவர் அமைதியாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பேசிய தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என பேசியதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
