இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. பலி எண்ணிக்கை 260-ஐ தாண்டியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் இடிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல சாலைகள் இன்னும், பாதிப்படைந்து பயன்பாட்டுக்குவரவில்லை.


இந்த நிலையில், நிவாரணப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இமாச்சலப் பிரதேச அரசு `ஆப்தா ரஹத் கோஷ்” என்ற பெயரில் பேரிடர் நிவாரண நிதிக் குழு ஒன்ரை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிவாரணக் குழுவுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது மூன்று சேமிப்புக் கணக்குகளிலிருந்த வாழ்நாள் சேமிப்பான ரூ.51 லட்சத்தை `ஆப்தா ரஹத் கோஷ்’-க்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com