“நீதிமன்றத்தைவிட தான் `பெரிய ஆள்' என நினைக்க

விஷால் தரப்பில், “விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தின் காரணமாக அவரது வீட்டுக்கடனையும் விஷால்தான் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கென இருக்கும் ஓர் வீடும் அடமானத்தில் இருக்கிறது” எனக் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, “அண்ணா நகரில் இருக்கும் வீடு, விஷாலின் சொத்து விவரத்தில் சேர்க்கப்படவில்லை” என லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது நீதிபதி, “இவ்வளவு வருடங்களாக நடிக்கிறார். இன்னும் அவருக்கு லோன் இருப்பதாகக் கூறுகிறீர்களே?” எனக் கேள்வி எழுப்பியபோது, “ஆம் வீட்டுக்கடன் உள்ளது. அண்ணா நகர் வீடு அவருடையது அல்ல, அவரின் தந்தையுடையது. அவரது கிரானைட் தொழில் நட்டம் காரணமாக, விஷால் அந்தக் கடனைச் செலுத்துகிறார்” என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அடுத்த 28 நாள்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவிருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய ஆறு நாள்கள் அவகாசமும் கேட்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களைப் பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *