நாம் வண்டியில் செல்வது என்பது அத்யாவசியமான ஒன்று. ஆனால் அந்த வண்டிக்கு தேவையான பெட்ரோல், டீசல் விலை தான் குறைந்தபாடில்லை. அதன்படி தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 500 நாளாக எந்த மற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகிறது.
மேலும் பெட்ரோல், டீசல் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை எதிர்பராத வகையில் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.82 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.7.50 குறைந்து ரூ.94.24 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் இன்று வரை எந்த வித மாற்றமும் இல்லாமல் 500 நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு சிலிண்டர் விலை குறைத்தது போல் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என சில ஊடகங்கள் அறிவித்து வருகின்றன. இக்கருத்து வாகன ஓட்டி மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in