Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற பிரபல சீரியலில் முதன்மை காதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ராதிகா பிரீத்தி. கிட்டத்தட்ட 460 எபிசோடுகள் அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் இருந்து அவர் விலகியதற்கு அவருடன் சீரியலில் நடித்த அஸீம் தான் காரணம் என்று வதந்திகள் பரவியது.
இந்நிலையில், ராதிகா பிரீத்தி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், அந்த பேட்டியில், எதனால் நீங்கள் இந்த சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர்,எனக்கும் அஸீமுககும் சண்டை நடக்கும். ஆனால் நண்பர்களுக்குள் என்ன சண்டை நடக்கும் அதுதான் நடக்கும். மற்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் போது சம்பளம் சரியாக வராது. அது மட்டும் இல்லாமல், செட்டில் ஆண்களுக்கு பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லை, ஒரே கழிவறை தான். இதனால் எனக்கு சிறுநீரக தொற்று வந்துவிட்டது.
அந்த தொடரில் நடித்த பலருக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அது மட்டும் இல்லாமல், சிறுநீர் கழிக்க செல்லும் போது பள்ளி குழந்தைகள் போல் இயக்குனரிடம் அனுமதி வாங்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினால் எவ்வளவு நேரம் ஆகும் என்று மைக்கில் அனைவரும் காது படும்படி கேட்பார். இது போன்ற தர்ம சங்கடமான சூழ்நிலைகள் எல்லாம் நான் அனுபவித்திருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல பணி சூழல் அந்த இடத்தில் அமையவில்லை. அதனால் நான் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என பிரீத்தி கூறியுள்ளார்
The post “பாத்ரூம் போறப்போ …” இயக்குனரின் கேள்வியால் மனம் உடைந்த நடிகை.. appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com