
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக அரசு சென்ற மாதம் தொடங்கி வைத்த நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மேலும், மகளிர் உரிமைத் திட்டம் சார்ந்த சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என பல கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அந்த மாநாட்டில் அனைத்து மகளிர் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்ற கேள்வியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுப்பினர்.
இதனை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின அவர்கள் பதிலளித்து உள்ளார். அதாவது, “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளதாகவும், மேலும் மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார். மேலும் மகளிர் உரிமை திட்டத்தில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதனை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
Also Read >> போரை நாங்கள் தான் முடிப்போம்! எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! முடிவுக்கு வருமா?
இதுவரை மகளிர் உரிமை தொகை 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வழங்க பட்டதாகவும், 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளதாகவும், இதற்குமேல் தாண்டினாலும் பரிசீலனை செய்வோம் என்றும் கூறினார். மேலும் அவர் அதிமுக வேறு கட்சி என்று எல்லாம் பார்க்கமாட்டோம் எந்த கட்சியாக இருந்தாலும் நியாயமானவர்களுக்கு தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை உறுதியாக வழங்குவோம். குறைகளை ஆதாரத்துடன் கூறினால் அதனையும் நிவர்த்தி செய்து கொள்வோம் என்றும் கூறினார். அதோடு மேல்முறையீடு செய்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக சொல்கிறீர்கள் அதற்கான ஆதாரத்தை கொடுங்கள்” என்றும் கூறினார்.
நன்றி
Publisher: jobstamil.in