கலர் தெரபி (க்ரோமோ) குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?… நோய்களை விரட்டும் வண்ணங்கள்!

கலர் தெரபி (க்ரோமோ) குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?… நோய்களை விரட்டும் வண்ணங்கள்!

சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். நோய்களுக்கு எந்தளவுக்கு சிகிச்சை அளிக்கிறோமோ அதே அளவுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களும் மிக முக்கியம். அதிக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நோய்கள் வர முக்கியமான காரணங்கள் ஆகும். நோய்களுக்கான சிகிச்சை முறைகளும், பல தெரபி வகைகளும் கூடவே அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் சில வண்ணங்களைக் கொண்டு சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் கலர் தெரபி.

கலர் தெரபியை பொருத்தவரை, மருத்துவ முறைக்கு மாற்றாக அமைவது அல்ல. ஒருவர் தனது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு பல விதமான மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதோடு சேர்த்து இந்த கலர் தெரபியையும் மேற்கொள்ளலாம். இந்த கலர் தெரபி பலன் ஆனது ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்னைக்கு ஏற்ப வேறுபடுகிறது. பலருக்கும் இந்த கலர் தெரபி நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

ஒரு சில வியாதிகளுக்கு நமது எண்ணமே காரணமாக அமைகிறது. அந்த எண்ணம் சார்ந்த வியாதிகளுக்கு, சில நிறங்களைக் கொண்டு மூளையில் சில ரசாயனங்களை சுரக்க வைத்து அந்த வியாதிகளை விரட்டவும் கலர் தெரபி உதவுகிறது.கலர் தெரபியில் வானவில்லில் உள்ளது போன்று பலவிதமான நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறங்களின் கலவை ஏனென்றால், ஒவ்வொரு நிறம் ஒவ்வொருவருக்கு பிடிக்கும் அல்லது ஒவ்வொரு நிறம் ஒவ்வொருவருக்கு ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.

உதாரணமாக. சிலருக்கு நீலம் மிகவும் பிடிக்கும். சிலருக்கு நீலம் பிடிக்காது. சிலருக்கு சிகப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு சிகப்பு அலர்ஜியாக இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் நிறத்தின் மீதுள்ள ஈர்ப்பு மாறிக்கொண்டே இருக்கும். இப்படி ஒருவருக்கு எந்த நேரத்தின் மீது எப்படி ஈர்ப்பு உள்ளது என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த சிகிச்சைகள் மசாஜ் முறையில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை முறைகள் உள்ளது. எனவே, அந்தந்த நிறங்களுக்கு ஏற்றாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மனிதர்களின் அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அதிர்வெண் உள்ளது. உறுப்புகள், சில ஆற்றல் மட்டங்களில் சிறப்பாகச் செயல்படுகின்றன. எனவே, இந்த அதிர்வெண் நிலைகள் நோய் அல்லது பாதிப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.அந்தவகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குணநலன்கள் இருக்கும். அந்த குணநலன்களை மனதில் கொண்டு, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கு ஏற்றவாறு நிறங்கள் மற்றும் சிகிச்சைகள் மாறுபடும்.

நீல நிறம் வெவ்வேறு மனநிலையை மேம்படுத்துவதோடு, பல்வேறு உறுப்புகளுக்கு ஒரு இனிமையான உணர்வை கடத்துகிறது. தலைவலி, மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, நரம்பு உறுதியற்ற தன்மை, சியாட்டிகா மற்றும் பிற அழற்சி நிலைகளுக்கு நீல நிறம் பயன்படுகிறது.மஞ்சள்: மஞ்சள் நிற சிகிச்சையானது ஒருவரின் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மேலும், கவலை, மன அழுத்தம் மற்றும் மூச்சுக்குழாய் சிரமங்களுக்கு நன்மையளிக்கிறது.

இயற்கையின் தாக்கம் கொண்ட நிறமான பச்சை நிறம், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது . பதட்டமான நரம்புகளை உடனடியாக அமைதிப்படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு.ஆரஞ்சு: ஆரஞ்சு நிறம் மகிழ்ச்சியான உணர்ச்சி, பசி மற்றும் மன செயல்பாட்டைத் தூண்டுகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *