தமிழக அரசின் கீழ், பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் இந்த போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் பணியாளர்கள் தேர்வு செய்யபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.
Also Read : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போக போறீங்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..!
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இவர்களுக்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்பினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ இனையத்தளத்தில் சென்று தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நன்றி
Publisher: jobstamil.in