இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் பேச வேண்டுமென்றால், அரசியல்வாதியாக மாறி அவர் தாராளமாக அரசியல் பேசட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் படிக்காமல் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்போல ஆளுநர் பேசுகிறார். இது தமிழ்நாடு அரசுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப்பிரசாரம். நாயக்கனேரி ஊராட்சிமன்றம் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலேயே அங்கு பதவியேற்பு நடைபெறவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக சனாதனம் குறித்துப் பேசிவந்த ஆளுநர் ரவி, சமீபகாலமாக சாதிப்பிரச்னைகள் குறித்து அதிகமாகப் பேசிவருகிறார். வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம், நாங்குநேரியில் பட்டியலினச் சமூக மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட பிரச்னை உட்பட பல பிரச்னைகளை ஆளுநர் ரவி கிளப்பியிருக்கிறார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையிலான உஷ்ணம் மேலும் அதிகரித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
