இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாகக் கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களைக் கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக் கூட்டம் தொடர்பாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கொரோனா காலத்தில் பிரதமர் தான் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருந்தால் என்ன எதிர்வினை வந்திருக்குமோ அதே தான் எனது எதிர்வினை” எனப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
