தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பி அனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது.


எனவே, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆளுநரின் செயலாளருக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com