நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் வாய்ப்பேயில்லை” என்றார்

இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம் “தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சொல்வதில் என்ன தவறு? தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஆரோக்கிய சூழல் நிலவிடும் எண்ணத்தில் இப்படி பேசியிருக்கிறார். இதையும் தி.மு.க-வினர் விமர்சிக்கிறார்கள் என்றால் ஆளுநர் பிரச்னை முடிவுக்கு வரக்கூடாது, ஆளுநரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் கிளம்புகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அனுப்பும் அத்தனை மசோதாக்களையும் திருப்பி அனுப்புவதுபோல் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் 100-ல் 10 மசோதாதான் திருப்பி அனுப்பப்படுகிறது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்கிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தினால்கூட தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
