பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாராத பராமரிப்பு)
காலியிடங்கள் : 2
தொகுப்பூதியமாக ரூ. 27,804/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும்.
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலையில் சமூகப்பணி/சமூகவியல்/ குழந்தைகள் வளர்ச்சி/ மனித உரிமைகள்/பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம்/ சட்டம்/பொது சுகாதாரம் / சமூக மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலையில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமை/ பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அதனுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை / சமூக நலத்துறையில் திட்டங்கள் உருவாக்கம்/அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது: 01.08.2023 அண்றுள்ளபடி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பதவி: சமூகப்பணியாளர்
காலியிடங்கள் : 2
தொகுப்பூதியமாக ரூ. 18,536/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும்.
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலையில் சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைநலன் சர்ந்த பணியில் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும் கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது -01.08.2023 அன்றுள்ளபடி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பதவி: புறத்தொடர்பு பணியாளர் (Outreach worker)
காலியிடங்கள் : 2
தொகுப்பூதியமாக ரூ. 10,592/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
புறத்தொடர்பு பணியில் தகவல் தொடர்பு திறன்கொண்டிருக்க வேண்டும் என்றும், புறத்தொடர்பு பணியில் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது-01.08.2023 அன்றுள்ளபடி 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூரீத்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 01.09.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண் 164. இரண்டாவது தளம். எம்.எம்.பிளாசா. திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com