Today News in Tamilnadu 2023

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி உயர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு தமிழக அரசின் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது வரை 4 சதவீதம் ஊதியத்தால் ஊழியர்கள் பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து, ஜூலை மாதத்திற்க்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜூலை மாதம் முடிந்து, செப்டம்பர், அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டது. இப்போது வரை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
Also Read >> காலேஜ் பீஸ் கட்ட முடியலையா? அரசின் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குத்தான்… உடனே படிங்க!
இந்நிலையில், அரசாங்க ஊழியர்களுக்கு, தீபாவளி போனசாக அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது 4 சதவீதமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.
நன்றி
Publisher: jobstamil.in