
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில்(Gmail) சேவையை நிறுத்தப்போவதாவும் இது குறித்து பயனர்கள் சிலருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாவே இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், அன்புள்ள ஜிமெயில் பயனரே, ஜிமெயில் குறித்த ஒரு முக்கியமான அப்டேட்டை தெரிவிக்கிறோம். ஆகஸ்ட் 1, 2024 முதல், ஜிமெயில் அதிகாரபூர்வமாக சேவை நிறுத்தப்படும். அதன்பிறகு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பவோ, பெறவோ, சேமிக்கவோ முடியாது” என்ற தகவலை எக்ஸ் தளத்தில் பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.
Also Read > தமிழ்நாடு அரசின் TNGCC வெளியிட்ட வேலை அறிவிப்பு..! உடனே விண்ணப்பித்திடுங்கள்…
இதனை அறிந்த ஜிமெயில் பயனர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், தங்கள் கணக்கில் வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த செய்தி குறித்து கூகுள் நிறுவனம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜிமெயில் பற்றி பரவி வரும் செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை நிறுத்தாது என்பது உறுதியாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்த பயனர்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர்.
கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான், பயனர்கள் மின்னஞ்சல்களை எளிதாக எழுதும் வகையில் டூயட் ஏஐ என்ற அம்சத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏராளமான பயனர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in