
தமிழகத்தை தொடர்ந்து ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தீபாவளி போனஸ் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4% அகவிலைப்படியை (Haryana DA Hike) உயர்த்தி அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டிருக்கிறார்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்று கூறிய அவர் இந்த முடிவை கருத்தில் கொண்டு ஹரியானா அரசும் தீபாவளிக்கு முன் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்து உள்ளது என தெரிவித்தார்.
Also Read >> வெளியாகிறது ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1, 2023 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும் இதனால் ஹரியானாவில் உள்ள சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் எதிர்பாராத நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in