குட் நியூஸ்..!! மின் கட்டணம் குறைகிறதா..? முதலமைச்சருடன் அமைச்சர் அவசர ஆலோசனை..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடி பேருக்கு முதல்வர் கடிதம்..

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறுகையில், ”மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மின்கட்டண முறைகளை மாற்றி அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மின்வாரியம் நஷ்டத்தில் இருப்பதால், பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *