
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயருவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தங்கம் எவ்வளவு விலைக்கு விற்றாலும் பெண்களுக்கு நகையின் மீது ஆர்வம் குறைந்த பாடில்லை. வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது விற்கும் தங்கத்தின் விலைக்கு நடுத்தர மக்கள் நகை வாங்குவது என்பது சிரமமாக தான் உள்ளது. ஒரு சில நாட்கள் விலை குறைவது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அடுத்த நாளே உயர்ந்து விடுகிறது.
அதன்படி தான் நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதாவது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து காணப்பட்டது. ஆனால் இன்று உயர்ந்துள்ள தங்கத்தின் விலை மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாக உள்ளது.
ALSO READ : டைரக்ட்டா இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க – சென்னையில 75 பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 46,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 5,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in