குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டத்தில்

இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என கூறப்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு படிப்படியாக அனைத்து மகளிருக்கும் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் பணம் சேராத பெண்களுக்கும் நிலுவைத் தொகை சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மட்டும் மாதம் 2,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது அம்மாநில அரசு, இதன் மூலம் 1.2 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

சாமூண்டீஸ்வரி கோயில்சாமூண்டீஸ்வரி கோயில்

சாமூண்டீஸ்வரி கோயில்

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனும் பயன்பெற்று மாதம்தோறும் ரூ.2000 பெறுவதாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக கர்நாட மாநில மேலவை உறுப்பினரும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு துணை தலைவருமான தினேஷ் கூலிகவுடா, அம்மாநில துணை முதல்வர் டி.`கே சிவகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மைசூரு சாமூண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லக்‌ஷ்மி திட்டத்தில் சேர்க்க வேண்டும் அவருக்கும் மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஏற்ற துணை முதல்வருக்கும் சாமூண்டீஸ்வரி அம்மனையும் திட்டத்தில் சேர்த்துள்ளார். இப்போது கர்நாடகாவின் பிற பெண்களை போலவே சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் மாதம் ரூ.2000 அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த செய்தி கர்நாடக பெண்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *