ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “ டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். இது ஒரு திருப்புமுனை உச்சிமாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது.” என்றார்.


பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “G20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான G20 நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்திருக்கின்றன. ரஷ்யா இன்னும் போரை நடத்திக்கொண்டிருக்கிறது. பிராந்தியங்களைக் கையகப்படுத்துதலுக்கான அச்சுறுத்தலையும் தவிர்க்க வேண்டும். G20 மாநாடு உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதி நிலவ உறுதியேற்றிருக்கிறது. பிரதமர் மோடிக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.
இந்தியா தரப்பில், “G20 மாநாடு என்பது புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளைத் தீர்க்கும் தளமல்ல. இது உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. காலநிலை நெருக்கடி பற்றி பேசவே இங்கு கூடியிருக்கிறோம். எனவே, ஜி20 மாநாடு மற்ற விஷயங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com