காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, பொது அமைதிக்கு இடையூறு மற்றும் மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜனவரி 16-ம் தேதி காலை 12 மணி முதல் மணிப்பூர் அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
இதனிடையே குக்கி பழங்குடியினர் மோரேவில் இருந்து மாநில காவல்துறையை அகற்றிவிட்டு மத்தியப் படைகளை மட்டும் வைத்திருக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டனர். குக்கி இன மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மணிப்பூர் காவல்துறை மறுத்துள்ளது. மேலும் மாநில காவல்துறை கமாண்டோக்களை தாக்கியவர்கள் மலை பகுதி கிளர்ச்சியாளர்கள் என்று கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com