“நிலவில் சந்திரயான் 3 ; பூமியில் எடப்பாடியாரின் மாநாடு


“கச்சத்தீவை திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை மாற்றி எழுத, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.

நலத்திட்ட உதவி

எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் விருது வழங்கியதை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை எடப்பாடியார் செயல்படுத்தியதால், புரட்சித்தமிழர் பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள். ஆனால், அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசி வருகிறார்கள்.

அது மட்டும் அல்ல, மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் உலக பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டிலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயமாக பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

மதுரை அ.தி.மு.க மாநாடு

அதனைத் தொடர்ந்து 9,10, 11, 12, 13, 14, 15 ஆகிய தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்தும், ஸ்டாலினை கண்டித்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் 16-வதாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கச்சத்தீவை திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை மாற்றி எழுத பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஸ்டாலின் முயற்சிக்கிறார். கச்சத்தீவு பிரச்னையில் கூட ஜெயலலிதா இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் வருவாய்த்துறையும் இணைக்கப்பட்டது. கச்சத்தீவை மீண்டும் மீட்டுத் தர மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இதுவரை யாரும் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் அமைக்கும் வியூகத்தின் படி செயல்பட்டு எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க சூளுரை ஏற்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் புரிந்தும் புரியாததுபோல் ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை நகைச்சுவையாகத்தான் பார்க்கிறார்கள.

நலத்திட்ட உதவி

தமிழகம் மென்பொருள் உற்பத்தியில் முதலிடம் வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியும் தமிழகத்தில் கடன் சுமை முதலிடத்தில் இருக்கிறது. ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். சந்திரயான்-3 நிலவில் சாதனை படைத்திருக்கிறது. எடப்பாடியார் தலைமையிலான மாநாடு பூமியில் சாதனை படைத்திருக்கிறது” என்றார்.

Junior vikatan 1

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *