Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராகி அவர் தரப்பில் நீதிபதி.பி.டி.ஆஷா முன்பு மன்னிப்பு கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் 6 கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், முழுமையான தகவல்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய லைகா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
The post ”என்னை மன்னிச்சிருங்க”..!! ”6 வங்கிக் கணக்குகள்”..!! நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த வார்னிங்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com