ஆனாலும், அவருக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையே உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பலமுறை அவர் சைவம் எனத் தெரிவித்தும், கடந்த 11 நாள்களாக அவருக்கு உணவு வழங்க மறுத்துவிட்டனர். மேலும், அந்த சிறையில், காவல்துறை அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உண்ண உணவும் தண்ணீரும் கொடுக்கப்படவில்லை.

மேலும் இந்தியத் தூதரக அணுகல், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதற்கான உரிமை, சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவையும் மறுக்கப்படுகின்றன. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்த பிறகே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள். இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
