இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, `நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற நோக்கத்தில், பாலஸ்தீனத்தின் வடக்கு காஸா பகுதியில் ராணுவ பீரங்கிகள், எழுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவற்றுடன் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது.


காஸா வாசிகள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,000-ஐ கடந்துவிட்டது .


ஐ.நா-வின் கூற்றுப்படி, காஸாவில் 1,300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான கொடுமையான போரில் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்துவருவது போரை நீள வைக்கிறது. இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி, 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறதென்றும். இதைக் கண்டு உலகமும் மௌனமாக இருக்கிறதென்றும் கூறியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com