துருக்கியர்களுக்கு எதிரான அரேபியர்களின் உள்நாட்டுப் போரை பிரிட்டன் தூண்டிவிட்டது. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தை வீழ்த்த முடியாமல் இருக்கும் தனக்குச் சாதகமாக ஏதேனும் நடக்கும் என்று எண்ணியது பிரிட்டன்.


ராணுவ சாகசங்கள், தூதரக தந்திரங்கள் இரண்டிலும் கைதேர்ந்தவராக விளங்கிய லாரன்ஸ், அரபு மக்களுக்கும் உண்மையாகவே நடந்து கொண்டதால் அவர்களின் விசுவாசத்தைப் பெற்றார். எகிப்திலுள்ள கெய்ரோவில் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் லாரன்ஸ். பிரிட்டிஷ் ராணுவத்தில் தளபதியாக இருந்த இவர் திறமையற்றவர் என்ற நினைப்பு அவரது மேலதிகாரிக்கு.
துருக்கியர்களுக்கு எதிராக அரபு இளவரசர் ஃபைசல் புரட்சி செய்யப்போவதாகச் செய்தி வர, இது குறித்த விவரங்கள் சேகரிக்க லாரன்ஸ் அனுப்பப்பட்டார். பிறப்பால் ஆங்கிலேயர்தான் என்றாலும் அரபு மொழியும் கலாசாரமும் அறிந்தவர் லாரன்ஸ். நீண்ட பாலைவனப் பயணத்துக்குப் பிறகு இளவரசர் ஃபைசல் மற்றும் அரபுத் தலைவர் ஷெரீப் உசேன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். லாரன்ஸின் அறிவாற்றலும் வெளிப்படையான பேச்சும் இளவரசருக்குப் பிடித்துப் போனது.
நன்றி
Publisher: www.vikatan.com