இஸ்ரேல் – பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் முற்றுகையிட்டதால், நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள்கள் விநியோகம் தடைப்பட்டது. இதனால் தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் காஸா மக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐ.நா-வின் பல்வேறு ஏஜென்சிகள் முடிவு செய்து, அதற்கான உதவிகள் பெறப்பட்டன.
திரட்டப்பட்ட மனிதாபிமான உதவிகளை காஸாவுக்கு கொண்டுசெல்ல எகிப்தின் ராஃபா எல்லை மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காஸாவாசிகளுக்கான மனிதாபிமான உதவிகளான சுமார் 3,000 டன் உதவி பொருள்கள் விமானம் மூலமாக எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டு, எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் சொந்தமான 20-க்கும் அதிகமான லாரிகளில் ஏற்றப்பட்டு, ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நன்றி
Publisher: www.vikatan.com