கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த இந்த தீவிபத்தில் சிக்கி மேலும், 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும் அதன் உரிமையாளரான ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறியுள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com
நன்றி
Publisher: 1newsnation.com