மறைந்த பிரபல இயக்குநர் சி.வி.ராஜேந்திரனின் மனைவி ஜானகி மாரடைப்பால் சென்னையில் காலமானார். பல மறக்க முடியாத திரைக்காவியங்களை அளித்தவர் சி.வி.ராஜேந்திரன். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, உல்லாசப்பறவைகள், வாணி ராணி ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
சி.வி.ராஜேந்திரன் திரைப்படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர், அதனால்தான் சுமதி என் சுந்தரி, ராஜா, பொன்னூஞ்சல் உள்ளிட்ட படங்களில் மறக்க முடியாத பல பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் இயக்குநர் சி.வி.ராஜேந்திரனின் இவரது மனைவி ஜானகி, மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 74. சென்னை தி.நகர் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்றுமாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com