Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் நம்பர் 1 கோடீஸ்வரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். இந்நிலையில், எலான் மஸ்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார். அதனைத் தொடர்ந்து அடிக்கடி தனது அதிரடி முடிவுகளால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபலமான “தி நியூயார்க்கர்” எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என்ற கட்டுரையில், அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதள கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது” என செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், “எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்” என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாதுகாவலர்கள் புடை சூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் தளத்தின் நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post அரசின் முடிவுகளில் தலையிடும் எலான் மஸ்க்..!! உயிருக்கே ஆபத்து..!! கதறும் தந்தை..!! என்ன நடந்தது..? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com