சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார்.
அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை தீரும் என்று பார்க்கின்றனர். அதிமுக-வில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தோம்.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று பலர் கூறி வருவதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். விவாத மேடையில் பங்கெடுப்பவர்கள் அதிமுகவை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்.
அதிமுக-வை பொறுத்தவரை தமிழக மக்கள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்களுக்காக தான் நாங்கள் முடிவெடுப்போம். அதிமுக மக்களின் மாபெரும் ஆதரவை பெற்று 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் நன்மைக்காக பாடுபடுவோம். தமிழக மக்களின் நன்மைக்காக எந்த திட்டம் வந்தாலும் அதனை ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
