கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் விதிகளை மீறி கிரானைட் குவாரிகளை நடத்தி விவசாய நிலத்தை, நீர்ப்பாசனக் கால்வாய்களை, வழிபாட்டிடங்களை, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைகளை அழித்த குவாரி உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இன்றுவரை மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை.
அப்படியொரு கிரானைட் முறைகேடி வழக்கில்தான் துரை தயாநிதி ஆஜராக வந்தார். மேலூர் கீழவளவு பகுதியில் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த நிறுவனம் விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியாக, துரை தயாநிதி அழகிரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.

மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, சமீபத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில்தான், நேற்று விசாரணைக்கு வந்தது. துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பின்பு வெளியே வந்த துரை தயாநிதியிடம் அரசியல் வருகை குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால், அவர் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com