அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனையும் கருத்தில் கொண்டும், அறிவிப்புகள் வெளியிடப்படுகிரது. அந்தவகையில், தற்போதும் ஒரு அதிரடியை தந்து திக்குமுக்காட வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில், தொழில் முறை கல்வி ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500ஆகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.1,500-இல் இருந்து ரூ.2,000ஆகவும், பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.750-இல் இருந்து ரூ.1,000 ஆகவும், அரசாணை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது அரசு உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகை தொகை 2023-24 கல்வியாண்டில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி சி மற்றும் டி ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும். தொகுதி ஏ மற்றும் பி அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அது வழங்கப்படும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில், முந்தைய வரம்பு தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு தொழில் முறை கல்வி ரூ.2,500-இல் இருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000-இல் இருந்து ரூ.25,000, பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.1,000-இல் இருந்து ரூ.25,000 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com