உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும் இதை செய்தால் ஆபத்துதான்!… ஒருபோதும் இந்த தவறை செய்துவிடாதீர்கள்!

உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும் இதை செய்தால் ஆபத்துதான்!… ஒருபோதும் இந்த தவறை செய்துவிடாதீர்கள்!

மனிதனுக்கு உணவும் தண்ணீரும் முக்கியம். ஆனால் இவைகளின் சேர்க்கை சில நேரங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் பெரிதும் உதவுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில பொருட்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிகள் உள்ளன. அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

டீ, காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை, வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிட்ரிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்கவும். ஆனால், உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், 45 நிமிடங்களுக்குப் பின்பும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *