சாலைகள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அழகான சாலைகளில் இயற்கையை ரசித்து கொண்டே பயணம் செய்வது பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். உலகம் முழுவதும் ஏராளமான சாலைகள் உள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மிக நீளமான நெடுஞ்சாலை பற்றி பார்க்கலாம்.
இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கட்டமைப்புகளில் அசத்தி வருகிறது. கோல்டன் நாற்கர பாதை (Golden Quadrilateral) என்பது பெருநகரங்களான சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை ஆகியவற்றை இணைக்கும் சாலை பாதையாகும். இந்த தங்க நாற்கர நெடுஞ்சாலை, உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைகள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. நெடுஞ்சாலைகளின் இணைப்புகளை கொண்ட இது டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு முக்கிய இந்திய நகரங்களை இணைக்கிறது. 5,846 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைக்கான திட்டமிடல் பணிகள் 1999 இல் நிறைவடைந்தன.
2001 ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 2012 ஜனவரியில் நெடுஞ்சாலை நிறைவடைந்தது. நெடுஞ்சாலை முழு வழியிலும் 4 முதல் 6 வழி பாதைகள் உள்ளது. இந்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (என்.எச்.ஏ.ஐ) பராமரிக்கப்படுகிறது. தங்க நாற்கர பாதை 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் வழியாக செல்கிறது.
இந்த சாலை மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இடமளிக்க உதவுகிறது. இது விவசாய பொருட்கள், உற்பத்தி பொருட்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் உள்ளூர் சுரங்க போக்குவரத்து ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். போக்குவரத்துக்கு மட்டுமல்ல, அரதடி அகண்டல்மணி கோயில், பத்ரகாளி கோயில், சந்த்பாலி நதி துறைமுகம், தாம்நகர், பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம், மா பிரஜா கோயில் மற்றும் ஸ்வேதா பராஹா போன்ற பல சுற்றுலாத் தலங்களுடன் இந்த சாலை இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com