உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. தற்போது இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது
கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு நிருபேந்திர மிஸ்ரா அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் மாதத்திற்குள் முதல்தளம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com