பிக்பாஸ் 7-வது சீசன் தொடங்கிய நாள் முதலே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை இரண்டு வீடுகள், புதிய விதிகள் ஆகியவற்றை பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது. இதுவரை நடந்த ரியாலிட்டி ஷோக்களின் அனைத்து சீசன்களிலும் முதல் வாரத்தில் அறிமுகம் இல்லாதவர்கள் நாமினேஷன் பட்டியலுக்கு சென்றனர். ஒரு டாஸ்க் கூட வைக்காமல் அவர்களின் திறமையை அறியாமல் அவர்கள் நாமினேட் செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த வகையில், கடந்த வாரம் பாவா செல்லதுரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் முதல் நாமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டனர். பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல இருக்கிறார்கள்.
இந்நிலையில், முதல் வாரத்திலேயே பிக்பாஸ் 7 சீசனில் இருந்து அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். ரவீனா அதிகமாக வாக்குகள் பெற்ற நிலையில், அனன்யா 9.75% வாக்கு மட்டுமே பெற்றிருக்கிறார். இதற்கிடையே, முதல் போட்டியாளராக வெளியேறிய அனன்யா ராவ் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு அவருக்கு, 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு வாரம் அவர் இருந்த காரணத்தினால், அவருக்கு மொத்தமாக 84,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com