இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை நம்முடைய உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் நாம் அனைவரும் திணறித்தான் போகின்றோம்.
அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல், பெண்கள் வரை இன்று அனைத்து தரப்பினரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை தலைமுடி உதிர்வு பிரச்சினையாக தான் உள்ளது.
இந்த தலைமுடி உதிர்வுக்கு மிக சுலபமான தீர்வு ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கிறது அதைப்பற்றி யாரும் இதுவரையில் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி அறிந்திருந்தால், இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனையே இருந்திருக்காது.
அதாவது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தை எடுத்து நன்றாக அரைத்து, நீர் சேர்க்காமல் பேஸ்ட் செய்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருக்கின்ற சாறை நன்றாக பிழிந்து, அதை தலைமுடி வேர்களில் படும் வரையில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சுமார் பத்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்த பின்னர், ஒரு மணி நேரம் அதை நன்றாக ஊற வைத்து, பின்னர் நீராட வேண்டும்.சற்றே கண் எறிச்சல் ஏற்ப்பட்டாலும், உடலுக்கு எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
மேலும், இத்துடன், புதினா அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்தும் தலையில் தேய்த்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக, ஆறு மாத காலத்திற்கு இதனை செய்து வந்தால், முடி உதிர்வு வெகுவாக குறையும் என்று, பல்வேறு சமூக ஊடகங்களில் பலர் பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com