
ரேஷன் கார்டு திட்டம் யாருக்கு உதவியாக உள்ளதோ இல்லையோ ஏழை எளிய மக்களுக்கு உதவியாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் வயிறார உணவு உண்கிறார்கள் என்றால் அது இத்திட்டத்தின் மூலமாக தான். அரசு ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு பல பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைகின்றனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
எனவே இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் மத்திய அரசு பல பொருட்கள் அடங்கிய சிறப்பு கிட் ஒன்றை வழங்க இருப்பதாக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். மேலும் பண்டிகை என்றால் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. எனவே மத்திய அரசு வர இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மக்களுக்கு சில சத்தான பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் தான் அது!
அதாவது, அந்தியோதயா மற்றும் இதர முன்னுரிமைத் திட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.100ல் ரேஷன் பொருட்கள் வழங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், மாவு, அரை கிலோ ரவா-சனா பருப்பு போன்ற பொருட்கள் ரேஷன் கிட்டில் உள்ளன. இதனை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த ரேஷன் கிட்டை எந்த தேதியில் இருந்து வழங்கலாம் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. எனவே 6 வகையான பொருட்கள் விலை ரூ.100ல் கிடைப்பதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in