இவ்வாறிருக்க, கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “ஆரியம், திராவிடம் என்பதே கிடையாது” என்று பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, ம.தி.மு.க எம்.பி வைகோ உட்பட பலரிடமிருந்து கடுமையான கண்டங்கள் வெளிவந்தன. இந்த நிலையில், திராவிடம் பற்றி யார் யாரோ பேசுகிறார்கள் என ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.


முன்னதாக, சென்னையில் தி.மு.க வழக்கறிஞர் A.N.புருஷோத்தம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், “திராவிடம் என்றால் என்ன என்று மாளிகையில் பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு யார் யாரோ பேசுகிறார்கள். திராவிடம் என்றால் என்னவென்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். இருந்தாலும் அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது நம் பிரசாரத்துக்கு வலுவாக இருக்கும். தயவுசெய்து இங்கிருக்கும் ஆளுநரை என்றைக்கும் மாற்ற வேண்டாம் என்று பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரையிலாவது அவரே இருக்கட்டும். எங்களுக்கு அது சௌகரியம் தான்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com