இந்நிலையில், மார்லினா, ஆண்டோ மதிவாணன் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இளம்பெண் மீதான தாக்குதல் தொடர்பாக ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 323 இன் படி, யாரேனும் ஒருவரைத் தானாக முன்வந்து காயப்படுத்துபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும. இதேபோன்று, ஐபிசியின் 354வது பிரிவு, ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது, பெண்ணுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் நடவடிக்கையை குறிக்கிறது. இந்த பிரிவின் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.விதிக்கப்படும்.
கைதா?, முன் ஜாமீனா? என்பது வரும் திங்கட்கிழமைக்கு தெரிந்துவிடும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
