2024: "அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட்

சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சாமியார் ஒருவர் இன்னும் ஒருபடி மேலாக, உதயநிதி தலையை சீவி கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தன் மீதான அவதூறுகள், கொலை மிரட்டல்களுக்கு எதிராக உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

உதயநிதி - Udhayanidhiஉதயநிதி - Udhayanidhi

உதயநிதி – Udhayanidhi

கழகத் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் நான் பேசிய பேச்சை `இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்” என்று திரித்து, அதையே மக்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார் யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *