என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்பமாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை” என்று கூறினார்.

இதேசமயத்தில், அ.தி.முக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் லியோ விவகாரம் குறித்துப் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சியில் திரைத்துறையை சுதந்திரமாகச் செயல்படவிட்டோம். அன்றைக்கு விஜய் படத்தை ரிலீஸ் செய்யவிட்டோம். ஆனால், இன்றைக்கு திரைப்படங்கள் ரெட் ஜெயன்ட்டுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லையென்றால், பிரச்னைகள், தொல்லைகள் வரும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் 20, 30 படங்களைத்தான் வெளியிட்டனர். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
