நேற்றுவரை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது. அதோடு, இந்த வழக்கில் மேல்முறையீடு (உச்ச நீதிமன்றம்) செய்வதற்காக 30 நாள்களுக்கு (ஜனவரி 22-ம் தேதி வரை) தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றத்திலும் எதுவும் நடக்கவில்லை என்றால், இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சியில் பழிவாங்கும் படலம் நடப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com